Sunday 5 February 2012

பாண்டிச்சேரி மொரட்டண்டி ஏரியா பெரியசிலை நவகிரக கோயில்











































































































































































































































































































































































































































































































































































































































































பாண்டிச்சேரி மொரட்டண்டி ஏரியா பிரதியங்காரா தேவி கோவில்



சுரைக்காய் சித்தர் அருளால் அருள்வாக்கு சொல்லும் முக்கால அம்மையார்










பிரச்சனைகளை சரியாக சொல்லி பரிகாரம் மூலம் தீர்கிறார்கள். ஜாதகம் , கைரேகை தேவையில்லை.








சுரைக்காய் சித்தர் அருளால் அருள்வாக்கு சொல்லும் முக்கால அம்மையார்

பிரச்சனைகளை சரியாக சொல்லி பரிகாரம் மூலம் தீர்கிறார்கள். ஜாதகம் , கைரேகை தேவையில்லை.for good reading, click on that image and again click once.. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரமாநிலத்தில் வாழ்ந்த சுரைக்காய் சித்தரின் அருளாசியால் நமது கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் பற்றி 100 சதவீதம் துல்லியமாக அருள்வாக்கு சொல்லுகிறார் முக்கால அம்மையார் அவர்கள். சிலருக்கு பரிகாரமும் செய்ய வேண்டியிருக்கும்.இவரை சந்தித்தபின்னர்,உங்கள் வாழ்க்கையில் ஒரு மகத்தான திருப்புமுனை உண்டாகும் என்பது உறுதி. ஒரு நாளைக்கு கட்டாயம் இரு நபர்களுக்கு மட்டுமே பார்க்க படும். எனவே முன்பதிவு அவசியம்.சுரைக்காய் சித்தரின் ஆசி பெற்ற முக்கால அம்மையாரைப் பற்றிய பதிவினை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.ஓம்ஹரிஹைரிஓம் --- சென்னை சிவாஇவர்களது செல் நம்பர்: 98407 99385,99945 99909,93805 95455 & 044-25752755E - Mail:mahasakthitrust@gmail.com


சுரைக்காய் சித்தர் அருளால் அருள்வாக்கு சொல்லும் முக்கால அம்மையார்

பிரச்சனைகளை சரியாக சொல்லி பரிகாரம் மூலம் தீர்கிறார்கள். ஜாதகம் , கைரேகை தேவையில்லை.for good reading, click on that image and again click once.. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரமாநிலத்தில் வாழ்ந்த சுரைக்காய் சித்தரின் அருளாசியால் நமது கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் பற்றி 100 சதவீதம் துல்லியமாக அருள்வாக்கு சொல்லுகிறார் முக்கால அம்மையார் அவர்கள். சிலருக்கு பரிகாரமும் செய்ய வேண்டியிருக்கும்.இவரை சந்தித்தபின்னர்,உங்கள் வாழ்க்கையில் ஒரு மகத்தான திருப்புமுனை உண்டாகும் என்பது உறுதி. ஒரு நாளைக்கு கட்டாயம் இரு நபர்களுக்கு மட்டுமே பார்க்க படும். எனவே முன்பதிவு அவசியம்.சுரைக்காய் சித்தரின் ஆசி பெற்ற முக்கால அம்மையாரைப் பற்றிய பதிவினை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.ஓம்ஹரிஹைரிஓம் --- சென்னை சிவாஇவர்களது செல் நம்பர்: 98407 99385,99945 99909,93805 95455 & 044-25752755E - Mail:














































Tuesday 10 January 2012

கீதை காட்டும் பாதை


பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு கூறாக அமைந்துள்ளது. பாண்டவர் -கௌரவர்களிடையே மூண்ட பெரும் போர்க்களத்தின் நடுவில் இறைவன் கண்ணனால் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கப்பட்ட நூல் பகவத்கீதையாகும். இம்மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்றும் கூறுவர். போர்க்களத்தினூடே மனதை ஒருநிலைப்படுத்தக் கூறப்பட்ட யோகமுறைகளே பகவத்கீதையாகும்.

பகவத்கீதையின் சிறப்பு

"அமிர்த சாத்திரம்" - அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாத்திரமாகிய பகவத்கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சிலர் கருதுகின்றனர்.

இவ்வுலகில் அனைவரும் மன உளைச்சலுடன் வாழ்கின்றனர். அல்லது அச்சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மன உளைச்சல் பல்வேறு விதமான நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. மனிதன் இம்மன உளைச்சலால் பல துன்பங்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆளாகின்றான். இத்தகைய துன்பங்களில் இருந்து அவன் விடுபட்டு மன அமைதியுடன் வாழ வேண்டும். இத்தகைய மன அமைதியுடன் வாழும் வாழ்க்கையைப் பற்றியே பகவத்கீதை எடுத்துரைக்கின்றது.

உடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன. உளத்திற்கு ஊறு நேரிட்டால் அது உடலைப் பாதிக்கின்றது. உளம் அமைதி அடைந்தால் உடல் நலம் பெறுகின்றது. அத்தகைய உள அமைதியை நல்கும் உன்னத நூலாகப் பகவத்கீதை இருக்கின்றது. போர்க்களம் என்பது இவ்வுலக வாழ்க்கை. அதில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் அனைத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகள். போராட்டம் நிறைந்த வாழ்வில் மனம் தடுமாற்றம் அடையாது வாழ்வதே உண்மையான வாழ்க்கை; அதுவே யோக வாழ்வு. இத்தகைய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்று கூறும் வாழ்வியல் சாஸ்திரமாக பகவத்கீதை அமைந்திலங்குகிறது.




பகவத் கீதை தரும் யோகம் பற்றிய விளக்கம்

பகவத்கீதை மனம் இறைவனுடன் இணையும் வழியை எடுத்துரைக்கின்றது. இறைவனுடன் உயிரானது இணைகின்ற நெறிகளை யோகமாகக் கூறுகிறது. யோகமாவது சமத்துவம் ஆகும். இதனை, “மத்வம் யோக உச்யதே” என்று பகவத்கீதை மொழிகிறது. அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி என்பது இதன் நுவல் பொருளாகும்.

நீ ஒரு பொருளுடன் உறவாடும் போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய். “யோகத குரு கர்மாணி’’ என்று பகவத்கீதையில் கடவுள் கூறுகிறார். “யோகத்தில் நின்று தொழில்களைச் செய்” என்பது இதன் விளக்கமாகும்.

யோகநெறியில் வாழ்பவன் யோகி ஆவான். யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவு போல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான்.

பகவத் கீதை தர்ம சாத்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோட்ச சாஸ்திரம். மனிதன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது. அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோட்ச மார்க்கத்துக்கு விரோதமென்று பலர் கருதலாயினர். அவர்களைத் தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் “தொழில் செய்’’, “தொழில் செய்’’ என்று போதிக்கின்றார். இதனால், அதனை வெறுமனே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.

இங்கு தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது. பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலும் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு. “சம்சயாத்மா விநச்யதி”, “ஐயமுற்றோன் அழிவான்” என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.



“ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக.” இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். இந்த விஷயத்தைப் பகவத்கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீண்டும் மீண்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக் கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.

நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நன்மையையும் தீமையையும் நிகராகக் கருதவேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லாது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத சயரோகத்தில் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையும் தெரியாமல் புத்தி மண்ணாய் விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும் வரை ஒருவன் காதலின்பத்துக்கும் சயரோகத் துன்பத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல் சாத்தியமன்று. ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. சயரோகம் நேரும்போது சாமன்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந்நோயை வலிதாகவும் கருதி, ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க்கிரையாக்கிக் கொண்டு, சயரோகி என்று தனக்கொரு பட்டம் சூட்டிக்கொண்டு வருந்திு மடிவது போல் ஞானி செய்யமாட்டான். ஞானி அத்தகைய நோய், ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத் தீயால் எரித்துத் தள்ளிவிடுவான்.

ஞானயோகம்

“ஞானக் நிர்வ கர்மாணி பமத் குருதே” - ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாகச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அக வாயிலாவேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோமாதலின். ஆனால், அதிலிருந்து இது ஞான சாத்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது. ‘‘முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே, “தமாத் யுத்ய வ பாரத”- “ஆதலால், பாரதா, போர் செய்”, என்ற பல்லவி வந்து கொண்டேயிருக்கின்றதன்றோ? என்று கூறிச் சிலர் மறுக்கலாம். அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதனை, இங்கு மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது நலம் பயப்பதாகும்.

துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன்- ஜீவாத்மா. கிருஷ்ணன் பரமாத்மா. இதுவே உண்மை. இங்ஙனம் வாழ்க்கையை நலமுடன் அனைவரும் மேற்கொள்ளக் குறியீடுகளைக் கொண்டு இறைவன் கிருஷ்ணன் விளக்கிச் செல்கிறார்.

கண்ணனை நோக்கி அர்ஜுனன் சொல்லுகிறான்;

“நீ வாயு; நீ சந்திரன்; நீ வருணன்; நீ அனைத்திற்கும் பிதா; பிதாமகன்” (கீதை 11-ஆம் அத்தியாயம், 39-ஆம் சுலோகம் )

கண்ணன் சொல்லுகிறான்;

“மறுபடியும், பெருந்தோளுடையாய், எனது பரம வசனத்தைக் கேட்பாய். என் அன்புக்குரிய நினக்கு நலத்தைக் கருதி அதனைச் சொல்லுகிறேன்.’’ (கீதை 10-ஆம் அத்தியாயம், முதல் சுலோகம்)

“நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்’’ - (கீதை 10- ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)

எனவே, கீதையில் கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும், கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள். கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும் துரியோதனாதியர் காமக் குரோதிகளென்பதும் சாத்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில் ஊகித்துக் கொள்ள இயலும்.



இயற்கை விதிப்படி வாழ்வதே யோகம்

கடவுளை வழிபாடு செய்வது எங்ஙனமென்பதை, கிருஷ்ணன் சொல்லுகிறார்

“நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்’’ (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)

எந்த உயிரகளுக்கும் துன்பம் செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த உயிரையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார், எந்த உயிரையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருதத்தகார். மாமிச உணவை உண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார். “அரிம் பரமோ தர்ம’’ - “கொல்லாமையே முக்கிய தர்மம்” என்பது. ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.

இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் “common sense” என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும். சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் மனிதர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில், “நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்” என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.

நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கை இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது. நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் .ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துக் கொண்டுமிருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக் கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.

கர்ம யோகம்

கீதையிலே பகவான் சொல்லுகிறான் - “அர்ச்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்யவேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கையொன்றும் எனக்குக் கிடையாது, அடையத் தக்கது, ஆனால், என்னால் அடையப் படாதது, எனவொரு பேதமில்லை எனினும், நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன்” ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் - “நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன்’’ என்று கூறுகிறார். செயல் செய்வதே யோகமாகும். அது கர்ம யோகமாகும். கர்மயோகம் செய்பவன் கர்ம யோகியாவான். கடவுளும் கர்ம யோகியாவர்.

கடவுள் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது.

எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய உயிர்களும், மரம், செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக் கொண்டு, அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை எண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால், “கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடும் நன்றே’’ என்று முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிகமாக நடமாடக்கூடிய மனிதரும் இருக்கக் கூடுமென்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது.

பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இஃதே பகவத்கீதையில் உபதேசிக்கிற கொள்கை. பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். மனித சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.



பாவம் புண்ணியம்

தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும். ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.

“இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை ஸ்ரீ கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலையன்று. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடுத்ததொரு முழையிலே கடவுளைக் காணமாட்டான். கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார். “அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்? ஏன்?' என்ற தென்னே பராபரமே?” என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

இவ்வுலகத்தில் மனிதர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று கருதலாம். இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து உயிர் வாழ வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. நனவின்பத்தைத் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லாப் பெரியவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.

கீதை கூறக்கூடிய யோகம் மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்குரிய வாழ்வியல் யோகமாகும். இயற்கை விதியை மீறாது தனது கடமைகளைச் செய்து, அனைத்துயிர்கள் மீதும் அன்பு செலுத்தி வாழ்பவன் யோகியாவான். அவன் கர்மங்களைச் செய்கின்ற போது கர்மாயோகி என்றழைக்கப்படுகின்றான். கடமையாகிய யோகத்தைச் செய்து கீதை காட்டிய வழியில் வாழ்ந்தால் யோகநிலையில் உயர்நிலையை மனிதன் அடைவது திண்ணம். கடமையைச் செய்வோம்! யோக நெறி வாழ்வோம்.

மலேசிய பத்துமலைக் குகை முருகன் கோவில்







மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன், இந்துக்களைப் போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாகிப் போய் விட்ட இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தலவரலாறு

மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள். தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்திருக்கிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார். இந்த மூன்று ஆலயங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது என்கிற வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.




கோயில் அமைப்பு

இந்த முக்கியமான பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.

மிகப் பெரிய முருகன் சிலை

தற்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி. இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் அதிகமாக பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

சிறப்பு விழாக்கள்

முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இங்கு வருடந்தோறும் தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, தமிழ்நாட்டில் முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது. ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சர்யமான ஒன்றாகும்.




சிறப்புக்கள்

மலாய்க்காரர்கள் எனப்படும் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வழிபடுவதில்லை என்றாலும் இக்கோவிலையும், இங்குள்ள மிகப்பெரிய முருகன் சிலையையும் சுற்றுலாவாக வந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.

பயண வசதிகள்

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பத்துகுகை அல்லது பத்துமலைக் குகை எனும் இந்தப் பகுதி அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால் பயண வசதி சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.

இன்னொரு ஜென்மம் இருந்தால்...?


நாளைய விடியல் நமக்குண்டா? என்பது தெரியாத மனிதனின் மனதில் மட்டும் பல நூறு வருடங்கள் வாழப்போகும் கனவுகள். கையளவு இதயத்தில் கடலளவு ஆசைகள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலங்களில் மனிதனின் வாழ்க்கையில் எத்தனை நிகழ்வுகள்! இந்த மனிதர்களிடம்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்! இறைவன் வகுத்த பாதையை மாற்றி தனக்கென புதுப் பாதையை வகுத்துக் கொண்டான்.

ஒரு மனிதன் எந்த சாதியைச் சேர்ந்தவனாக, எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், குடிசை வீட்டுக் கோவிந்தனாகவோ, கோடீஸ்வரன் என்ற கொம்பனாகவோ இருந்தாலும் அவன் தனது தாயின் கருவறையில் இருந்து மண்ணில் விழும்போது ‘குழந்தை பிறந்திருக்கிறது’ என்றுதான் சொல்வோம். ஒரு பார்ப்பனன் பிறந்திருக்கிறான். ஒரு இஸ்லாமியன் பிறந்திருக்கிறான் ஒரு கிறிஸ்தவன் பிறந்திருக்கிறான் ஒரு தலித் பிறந்திருக்கிறான். இல்லை ஒரு கோடீஸ்வரன் பிறந்திருக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை.

ஆம். முதலில் மனிதனுக்குக் கடவுள் வைத்த பெயர் ‘குழந்தை’ இந்தக் குழந்தை வளரும்போது பெற்றோரால் பெயரிடப்பட்டு பின்பு அதற்கு சாதிப் பெயரைச் சொல்லி சமூகத்தில் அடையாளம் காட்டப்படுகிறது. சாதி, மதம், பொருளாதாரம் இவற்றால் மனிதர்களே மனிதர்களை வேற்றுமைப் படுத்துகிறார்கள். ஆனால் விதியின் மீது பழியையும் இறைவன் மீது பொறுப்பையும் சுமத்துகிறார்கள்.

‘இந்த உலகமே தனக்குச் சொந்தமாகி விடாதா?’ என்ற மண்ணாசை கொண்ட மனிதன் விண்ணிலும் பட்டா போட பத்திரத்தோடு படையெடுக்க ஆரம்பித்த விட்டான். (செவ்வாயில் நிலம் விற்கப் போவதாகச் சொல்கிறார்கள். முந்துபவர்களுக்கு நிலாவுக்குச் சென்றுவர இலவச பயணச் சீட்டுக் கிடைக்கலாம். பதிவு செயயுங்கள்.)

இப்படி ஆடாத ஆட்டமெல்லாம் போட்டுவிட்டு பிறரையும் ஆடவைத்து விட்டு இறுதியில் ஆறடி குழிக்குள் அதாவது பூமித்தாயின் கருவறையில் விழும்போது அவனை ‘பிணம்’ என்றோ ‘சவம்’ என்றோதான் சொல்கிறோம்.

ஆக ஒரு மனிதனுக்கு பிறக்கும்போது குழந்தை என்றும் வாழும்போது மனிதன் என்றும் இறந்தபின் பிணம் என்றும் சொல்லப்படும் மூன்று நிலைகளை இறைவன் நிர்ணயித்துள்ளான். ஆனால் இவன் ‘மனிதன்’ என்ற நிலையில் நிர்ணயித்துக் கொண்ட வேறுபாடுகள் பாகுபாடுகள் எத்தனை? எத்தனை?

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக நல்லவர்கள் சோதிக்கப் (பாதிக்கப்) படுவதையும் தீயன செய்பவர்கள் நல்ல விதமாக வாழ்வதையும் நாம் கண்கூடாகக் காண முடிகிறது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது ‘நல்லதுக்கே காலமில்லை’ என்று பொதுவாகச் சொல்வதுண்டு. இல்லை ரஜினி டயலாக்கை நினைவு படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

‘இப்படி அயோக்கியத்தனம் செய்பவர்களெல்லாம் அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்பார்கள்.’ என்ற சபித்தல்களை அன்றாடம் ஆங்காங்கே கேட்கலாம். ‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்குக் கணவனாக வரவேண்டும்.’ (இங்கே கணவனின் மனநிலை எப்படி இருக்கும்? என்று அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது)

இதுபோன்ற வேண்டுதல்களை உறவுகளிடையே கூட நாம் கேட்க முடியும். நமது கடந்த கால, நிகழ்கால நினைவுகளை சற்று அசைபோட்டுப் பார்த்தால் நம் அனைவரது நெஞ்சிலும் யாராவது ஒருத்தர் நிலைத்திருப்பார்கள். அவர்கள் அடுத்த ஜென்மத்தில் ஒரு சகோதரனாக, சகோதரியாக, நண்பனாக, தாயாக, தந்தையாக நமக்கு அமைய வேண்டும் என்ற எண்ணம் நம்மை அறியாமலேயே கூட நம் மனதில் எழக்கூடும்.

அதே போல் நாம் யாரையாவது எதிர்பாராமல் சந்தித்து அவருடன் அதிக நட்பு கொள்வது, எதிர்பாராத உறவுகள் இவையெல்லாம் நிகழும்போதுகூட ‘இது முன் ஜென்மத்து உறவு’ என்று சொல்கிறோம்... ஆனால் முன் ஜென்மம் அடுத்த ஜென்மம் இவையெல்லாம் நிஜமா?

நிஜம்தான். அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? இன்னும் படியுங்கள். உங்களுக்கும் அந்த நம்பிக்கை வரலாம்.

இன்னொரு ஜென்மம் இல்லையென்றால் வெண்மேகமாக, விடிவெள்ளியாக என்றெல்லாம் வானத்தில் பிறக்கப் போவதாகப் பாட வேண்டாம். கண்டிப்பாக மறு ஜென்மம் எடுத்து மனதிற்குப் பிடித்தவர்களைச் சந்திக்கலாம்.

ஆனால் இந்த மறு ஜென்மப் பிறவி நமது முன் ஜென்ம வாழ்வின் பலன் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இறைவன் வகுத்த வழியில் மனிதன் என்ற நிலை தவறாது வாழ்ந்தால் நமக்கும் அடுத்த ஜென்மம் நற்பிறவியாக அமையும். இல்லையென்றால் முன் ஜென்மத்தில் அவரவர் விதைத்த விதையை அடுத்த ஜென்மத்தில் அறுவடை செய்ய நேரிடும்.

அப்பொழுதுதான் தெரியும் நமது வாழ்க்கை வரம் பெற்றதா? இல்லை சாபம் பெற்றதா? என்பது. இந்த மறு ஜென்மம் என்பது நமக்கு இந்த யுகத்திலும் கிடைக்கலாம் அல்லது அடுத்த யுகத்திலும் கிடைக்கலாம்.

இந்த யுகங்கள் என்புது ஒன்றா? இரண்டா? யுகங்கள் மொத்தம் நான்கு. அவை

1. கிரேதயுகம் (34,56,000 வருடங்கள்)
2. திரேதயுகம் (17,28,000 வருடங்கள்)
3. துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)
4. கலியுகம் (4,32,000 வருடங்கள்)
இந்த நான்கு யுகங்கள் கொண்டது ஒரு மகாயுகம்.
71 மகாயுகம் கொண்டது ஒரு மனு.
14 மனு கொண்டது ஒரு கற்பம்.

ஒரு கற்பம் என்பது 429,40,80,000 ஆண்டுகள். இந்தக் கணக்குப்படி உலகம் தோன்றி 644,71,73,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இப்படி முப்பது கற்பங்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாவது கற்பமான வாமதேவ கற்பம் முடிந்து இரண்டாவது கற்பமான சுவதேவராக கற்பம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் மூன்று யுகங்கள் முடிந்து நாலாவது யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.

8 யுகங்கள் சேர்ந்த நாட்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள்
பிரம்மாவின் ஆயுள் 100 ஆண்டுகள் (2,92,000 யுகங்கள்)
விஷ்ணு - 5,84,000 யுகங்கள்

உலகம் ஒருபோதும் முழுமையாக அழிந்து போவதில்லை. ஒவ்வொரு யுகம் முடியும் போதும் அவை மீண்டும் மறு சுழற்சி முறையில் புதுப்பிக்கப் படுகிறது. மீண்டும் கற்காலம், பொற்காலம், கணினிகாலம் என்று காலச்சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது.

ஒரு யுகத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மறு யுகத்திலும் நடக்கும் என்று சொல்லப் படுகிறது. நாஸ்டர்டாம் போல் அடுத்த நூற்றாண்டில் என்ன நடக்கும்? என்று சொல்லும் ஆரூட வல்லுநர்களுக்கு தனது முந்தைய ஜென்மத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அவர்களது உறங்கிக் கிடக்கும் மூளையின் மறுபகுதி விழித்தெழுந்து படம் போட்டுக் காட்டி விடுகிறதாம்.

இந்த ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகளை நாமும் நன்கு நினைவு வைத்துக் கொள்வோம். ஒருவேளை அடுத்த யுகத்தில் நமக்கு மறுபிறவி ஏற்பட்டால் ஆருடம் சொல்லப் பயன்படும். (மனிதனாகப் பிறந்தால் மட்டும்.)

முப்பது கற்ப காலங்கள்

1.வாமதேவ கற்பம்
2.சுவதேவராக கற்பம்
3.நீல லோகித கற்பம்
4.ரந்தர கற்பம்
5.ரௌரவ கற்பம்
6.தேவ கற்பம்
7.விரக கிருஷ்ண கற்பம்
8.கந்தற்ப கற்பம்
9.சத்திய கற்பம்
10.ஈசான கற்பம்
11.தமம் கற்பம்
12.சாரஸ்வத கற்பம்
13.உதான கற்பம்
14.காருட கற்பம்
15.கௌரம கற்பம்
16 நரசிம்ம கற்பம்
17 சமான கற்பம்
18 ஆக்நேய கற்பம்
19 சோம கற்பம்
20. மானவ கற்பம்
21.தத்புருஷ கற்பம்
22. வைகுண்ட கற்பம்
23. லெச்சுமி கற்பம்
24. சாவித்திரி கற்பம்
25. கோரம் கற்பம்
26. வராக கற்பம்
27. வைராஜ கற்பம்
28. கௌரி கற்பம்
29. மகோத்வர கற்பம்
30 பிதிர் கற்பம்

நமக்கு இன்னொரு ஜென்மம் இருக்கிறது. அப்பொழுதும் நாம் பிறந்து அனைவரிடமும் அன்போடு இருப்போம்.

Sunday 30 October 2011

ஜாதகத்தில் வீட்டின் பலன்கள்

3
Share வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கு நாம பார்க்கப் போகிற பாடம் , ரொம்ப இரத்தின சுருக்கமா இருக்கும். இதிலே வர்ற ஒவ்வொரு விஷயங்களையும், , நாம விரிவா - பின்னாலே பார்க்கப் போகிறோம்.. அதனாலே , கீழே கொடுக்கப் பட்டுள்ள விஷயங்களை நல்லா புரிஞ்சுக்கோங்க. ... பின்னாலே உங்களுக்கு ஈஸியா இருக்கும்.

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.

லக்கினத்தை - முதல் வீடு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

- 1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானம். (லக்ஷ்மி ஸ்தானம்)

- 1 , 4 , 7 ,10 - கேந்திர வீடுகள் என்பர். ( விஷ்ணு ஸ்தானம் )


- 3, 6 , 8 , 12 - மறைவு வீடுகள் என்று கூறுவர். அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..

- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர்.

===================

1 ஆம் வீடு - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது மிக்க பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.

2 , 11 - வீடுகளில் நின்றால் - பரவா இல்லை , நல்லது.

3 ஆம் வீடு - சுமார்.

6 ,8 ,12 - ஆம் வீடுகள் - நல்லதுக்கு இல்லை. அப்படினா என்ன, ஒரு சுப கிரகம் , இந்த வீடுகள் லே இருந்தா, அதுனாலே ஏதும் , பெருசா நல்லது பண்ண முடியாது.

=================================================

ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்.... மறைவு வீடுகளில் இருந்தால்... பகை வீட்டில் இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... , அந்த கிரகம் சரியான நிலைமையில் இல்லை என்று பொருள்.


====================================

ஒவ்வொரு லக்கினத்தையும் - நெருப்பு, நிலம், காற்று , நீர் - ராசிகள் என்று கூறுவர்.

மேஷம், சிம்மம் , தனுசு - நெருப்பு ராசிகள்
ரிஷபம், கன்னி , மகரம் - நிலம் ராசிகள்
மிதுனம், துலாம் , கும்பம் - காற்று ராசிகள்
கடகம் , விருச்சிகம் , மீனம் - நீர் ராசிகள்.

இதை ஈஸியா நீங்க ஞாபகம் வைக்கிறதுக்கு ஒரு ஐடியா இருக்கு,.

இங்கிலீஷ் லே - FIRE , LAND , AIR , WATER ---------- முதல் எழுத்துகளை மட்டும் ஞாபகம் வைச்சுக்கோங்க.. FLAW ...... (எப்பூடி....? )

===========================

லக்கினங்களை - சரம் , ஸ்திரம் , உபயம் னு மூணு வகைப் படுத்தலாம்.

மேஷம் , கடகம் , துலாம், மகரம் - சர ராசிகள்
ரிஷபம், சிம்மம் , விருச்சிகம் , கும்பம் - ஸ்திர ராசிகள்
மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் - உபய ராசிகள் .

இதனோட , அமைப்பு என்ன , ஏதுங்கிறது - பின்னாலே நாம விரிவா , அலசி ஆராயப் போறோம்.. இப்போதைக்கு , இத தெரிஞ்சுக்கோங்க...

============================================

கிரகங்களின் பார்வைகள் :

எல்லா கிரகங்களுக்கும் - பொதுவா ஏழாம் பார்வை உண்டு. அதாவது , எந்த ஒரு கிரகமும் , நேர எதிர இருக்கிற ஏழாம் வீட்டைப் பார்க்கும். ....

சரி பார்க்கட்டும்... அதுக்கு என்ன?

உங்க வீட்டுக்கு எதிரிலே நல்ல ஒரு வாத்தியார் இருக்கிறார்.. .. எப்படி இருக்கும்..? அதுவே ஒரு பேட்டை ரவுடி இருந்தா..?

சுப கிரகம் , பார்த்தா அந்த வீடு வளம் பெறும். பாவ கிரகம் பார்த்தா , நல்லது இல்லை.

எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு - 3 , 10 ஆம் பார்வைகள் உண்டு.
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.

இதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.

இது போக - சூரியனுக்கு - 3 , 10 ஆம் பார்வைகளும் ; ராகு , கேது - 3 , 11 ஆம் பார்வைகளும், சுக்கிரனுக்கு - 4 , 8 - ஆம் பார்வைகளும் உண்டு... ஆனால் , இவை முக்கியத்துவம் பெறுவதில்லை.

=====================================================

இதை எல்லாம் எதுக்காக இப்போ உங்களுக்கு சொல்லி இருக்கிறேன்னா, நாம் அடுத்த பாடத்திலேயே , ஜாதகம் வைச்சு , ஆராயப் போறோம்.. நான் பாட்டுக்கு குரு இங்கே பார்க்கிறாரு, சனி இங்கே பார்க்கிறாரு னு சொன்னா ... டக்கு னு புரியணும் இல்லியா..?

=======================================

சரி இப்போ --- ஓரிரு வார்த்தைகளில், 12 வீடுகளைப் பத்தி பார்ப்போம்..
இது ஒன்னொன்னும் - ஒவ்வொரு கட்டுரை எழுதுற அளவுக்கு - விரிவா பார்க்க வேண்டிய விஷயம்... இப்போதைக்கு , ஷார்ட் அண்ட் ஸ்வீட் ...

லக்கினம் - முதல் வீடு - ஜாதகரைப் பத்தி சொல்லும். ஆளு பார்க்கிறதுக்கு எப்படி ...தோற்றம்? குண நலன்கள் ........ ஒவ்வொரு லக்கினத்துக்கும் , சில அடிப்படை பண்புகள் இருக்கு...

இரண்டாம் வீடு - தனம் , குடும்பம், வாக்கு , ஆரம்ப கால கல்வி

மூன்றாம் வீடு - தைரியம், வீர்யம், இளைய சகோதரம்,,,

நான்காம் வீடு - கல்வி , மாதுர் ஸ்தானம் (தாய்), வாழும் வீடு, வாகனம், சுகம் .....

ஐந்தாம் வீடு - பூர்வ புண்ணியம், குழந்தைகள், குல தெய்வம், முற் பிறவி

ஆறாம் வீடு - கடன், நோய், எதிரிகள்

ஏழாம் வீடு - நண்பர்கள் , கணவன் / மனைவி

எட்டாம் வீடு - ஆயுள் , (பெண்களுக்கு - மாங்கல்ய ஸ்தானம் ), திடீர் எழுச்சி , வீழ்ச்சி , வில்லங்கம், சிறை, மான பங்கம், அவமானம்

ஒன்பதாம் வீடு - பாக்கிய ஸ்தானம் , பிதுர் (தந்தை) ஸ்தானம் ...

பத்தாம் வீடு - கர்ம ஸ்தானம்


பதினொன்றாம் ஸ்தானம் - லாபம், இரண்டாம் திருமணம் , மூத்த சகோதரம்

பன்னிரண்டாம் ஸ்தானம் - விரயம் , அயன , சயன போகம்.. அப்படினா? ஒழுங்கா தூங்குறது..... படுக்கை சுகம்...


இதெல்லாம் சில முக்கிய பலன்கள் பார்க்கிறதுக்கு ... இதை தவிர நிறைய விஷயங்கள் இருக்கு... அதை எல்லாம்... கொஞ்சம் கொஞ்சமா ...அப்புறம் பார்ப்போம்..
=========================

நவ கிரகங்களில் - ஒவ்வொரு வீட்டுக்கும் - ஒருவர் காரகம் பெறுகிறார்....
நாம் ஏற்கனவே கொடுத்துள்ள நவ கிரகங்களின் காரகத் துவங்களை, ஒரு தடவை திரும்ப பாருங்க...

===========================


சரி, இப்போ உதாரணத்துக்கு - ஒரு ஜாதகர் அவரோட அம்மாவை பத்தி பார்க்கணும்... னு நினைக்கிறார்...

என்ன , என்ன விஷயம் பார்க்கணும்.... சொல்லுங்க பார்ப்போம்...


First ----

ஜாதகர் - லக்கினத்தில் இருந்து - 4 ஆம் வீடு .... என்ன னு பார்க்கணும்..
அந்த வீட்டு அதிபதி யார்? அவரு எங்கே இருக்கிறார்..? நல்ல வீட்டிலே இருக்கிறாரா..? உச்சம் , ஆட்சி , நட்பு வீடு..? மறைவு வீடு இல்லாம இருக்கிறாரா? சுப கிரகசேர்க்கை இல்லை பார்வை உண்டா..?
நீசம் இல்லாம , பகை இல்லாம? அவர் கூட எதாவது பாவ கிரகம் இருக்கா...? ஏதாவது பாவ கிரகம் அவரை பார்க்குதா ?

4 ஆம் வீட்டிலே ஏதாவது - சுப கிரகம் இருக்கா..? பாவ கிரகம் இருக்கா..?


4 ஆம் வீட்டின் அதிபதி - எந்த நட்சத்திர சாரம் வாங்கி இருக்கிறார்..? அவர் நிலைமை யை யும்.. கவனிக்கணும்....


அது மட்டும் இல்லை... சந்திரன் நிலைமை என்ன னு பார்க்கணும்.. எதுக்கு சந்திரன்... ???

சந்திரன் தானே மாதுர் காரகன்,...?? மறந்துட்டீங்களா ...? மேலே சொன்ன எல்லாக் கேள்விக்கும் , சந்திரனை வைச்சும் பார்க்கணும்... ..

இப்போ கோச்சார ரீதியா... கோள்கள் எங்கே இருக்கு... அதனோட பார்வைகள் எங்கே .. எல்லாம் பார்த்துக்கிடனும்..?
==================

சரி , அம்மாவோட ஆயுள்.. பார்க்கணும்... So , 4 ஆம் வீட்டில் இருந்து - 8 ஆம் வீடு .. பார்க்கணும்.. கரெக்டா..? அப்படினா..? லக்கினத்தில் இருந்து.. 11 ஆம் வீடு.. திரும்ப மேலே சொன்ன எல்லாக் கேள்விக்கும்.. பாருங்க..

OK வா ....?
======================================


சரி, .... இப்போவே... கிர்ருனு ஆகுது னு... back அடிக்காதீங்க... .... இன்னும் கொஞ்சம் பாடங்கள் படிச்சீங்கனா... ஒண்ணுமே கஷ்டமா இருக்காது...

நீங்க எல்லாம் --- நல்லா ஆர்வமா கத்துக்கிட வந்து இருக்கீங்க... இன்னைக்கு நாட்டிலே நெறைய ஜோஷ்யருங்க ... படிப்பு ஏராம , படிக்க கஷ்டப் பட்டுக்கிட்டு.. பொழைக்க வழி தேடி.. ஜோதிடம் னு சொல்லிக் கிட்டு , அவங்க தலையிலேயே .. ஏறுதாம்... .. உங்களை மாதிரி " Genius " க்கு எல்லாம் , இது சர்வ சாதாரணம்...


ரொம்ப ஈஸியா... பிக் அப் பண்ணிடலாம்... ஒரு வேளை , நான் சொல்லிக் கொடுக்கிறது , சரி இல்லாம இருக்கலாம்... புரியலை னா... கேளுங்க... என்னாலே முடிஞ்ச அளவுக்கு சொல்லித் தர்றேன்..

கொஞ்சம் , கொஞ்சமா - பின்னாலே ஒரு சில விதிக்கு , என்ன என்ன காரணம் னு தெளிவா பார்க்கப் போறோம்... அதை எல்லாம் , தெரிஞ்சு கிட்டீங்க னா - physics , chemistry மாதிரி ஜோதிடமும் ஒரு க்ளியரான சப்ஜெக்டா தெரியும் உங்களுக்கு.. ..

எது , எப்படியோ.. ஆனா ... கண்டிப்பா இண்டரஸ்டிங் ஆ இருக்கும்... அதுக்கு நான் கேரண்டி... எப்படி தெரியுமா...? வெறுமனே விதிகளைப் பத்தி மட்டும் வைச்சு பார்க்கப் போறது இல்லை... என்னுடைய அனுபவத்திலே... நான் கண்ட , ஆராய்ந்த அமைப்புகள்... விதியில் இல்லைனா கூட.. அனுபவத்திலே, . நடைமுறை லே ஒத்து வர்ற விஷயங்களை யும் பார்க்கப் போறோம்...


Read more: http://www.livingextra.com/2011/02/08.html#ixzz1cIAKqOrv

ராசிகளின் உச்ச வீடு ! நீச வீடு !




எல்லோருடைய ஜாதகத்திலேயும், லக்கினம் , ( ல) , அப்படின்னு போட்டிருப்பாங்க. அதுதான் அந்த ஜாதகருக்கு - முதல் வீடு. எந்த வீட்டில் சந்திரன் இருக்கிறதோ, அது அவரது ராசி.

இன்னைக்கு நடைமுறைலே யாருக்கும் அவங்க லக்கினம் என்ன னு தெரியாது. ராசி ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். லக்கினம் அப்படின்னு பேச்சு எடுத்தாலே, அவருக்கு ஓரளவு ஜாதகம் பத்தி தெரிஞ்சு இருக்கும் னு நம்பலாம்.


எந்த ஒரு ஜாதகருக்கும், அவரது லக்கினம் தான் , முதல் முக்கியமான புள்ளி. லக்கினம் தெரியலை , இல்லை தப்பு னா, மொத்த பலன்களுமே தப்பா தான் போகும். அதைப் பற்றி , நாம் அப்புறமா பார்க்கலாம்.

ராசி அதிபதிகள் :


கீழே கொடுக்கப் பட்டுள்ள வீடுகளைப் பாருங்கள்.




மேஷம், விருச்சிகம் - செவ்வாய்க்கு சொந்த வீடுகள்.
ரிஷபம் , துலாம் - அதிபதி - சுக்கிரன்.
மிதுனம், கன்னி - அதிபதி - புதன்
கடகம் - அதிபதி - சந்திரன்
சிம்மம் - அதிபதி - சூரியன்
தனுசு , மீனம் - அதிபதி - குரு
மகரம் , கும்பம் - அதிபதி - சனி

ராகு, கேதுக்கு சொந்த வீடுகள் இல்லை. எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ , அதுவே அவர்களுக்கு வீடுகள் .

சரி, எதற்கு இந்த சொந்த வீடுகள். நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்? நீங்க தானே ராஜா.. முழு பலத்துடன் இந்த கிரகங்கள் - சொந்த வீட்டில் இருக்கும்போது இயங்கும். இந்த வீடுகளுக்கு ஆட்சி வீடுகள் என்று பெயர்.

சாதரணமா ஒரு கிரகத்துக்கு - சக்தி ஒரு மடங்கு னா, ஆட்சி ஸ்தானங்களில் மூன்று மடங்கு சக்தியுடன் இருக்கும்.

அதைப் போல , சில வீடுகள் - அந்த கிரகங்களுக்கு - உச்ச பலம் , நீச பலம் என்றும் இருக்கிறது. உச்ச வீடுகளில் அந்த கிரகங்கள் - ஐந்து மடங்கு பலத்துடன் இருக்கும். நீச வீடுகளில் , பலம் இழந்து பரிதாபமாக இருக்கும்.

இதைப் போல, ஒவ்வொரு இடமும் , ஒவ்வொரு கிரகத்திற்கு , நட்பு, பகை, சமம் என்று மூன்று பண்புகளுடன் இருக்கும். நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே , நாம இருப்போம் இல்லே.. ஒருத்தரைப் பிடிக்கும். ஒருத்தரை பிடிக்காது.. அந்த மாதிரி..
அவை எப்படி னு பார்க்க கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க.





இதை நீங்கள் கண்டிப்பாக , உங்கள் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.



சூரியன் - மேஷத்தில் உச்சம் எனில், அதற்கு நேர் ஏழாம் வீட்டில் நீசம் ஆகும்.
இதைப் போல ஒவ்வொரு கிரகத்திற்கும் பொருந்தும். கீழே பாருங்க.

நல்லா புரியுதுங்களா? இதெல்லாம் அடிப்படை பாடங்கள். இது எல்லாம் உங்களுக்கு எப்பவும் finger tips லெ இருக்கணும். இது பின்னாலே உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தாலே , உங்களுக்கு சில விஷயம் புரியணும். ஒரு கிரகத்துக்கு , இன்னொரு கிரகம் நட்பா இருக்கும். இல்லை பகையா இருக்கும்.
யாருக்கு , யாரைப் பிடிக்கும் , யாருக்கு யாரு - பகை னு பாருங்க.
இது எல்லாத்துக்கும் , நம்ம இந்து தர்ம முறைப்படி , நிறைய சுவாரஸ்யமான , பின்னணி இருக்கு... அதை எல்லாம் , பின்னாலே பார்க்கலாம்.





சரி, இப்போ ஒரு - செயல்முறைப் பயிற்சி : ( Practical)

இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் ஜாதகம், நமது தற்போதைய முதல்வர் , கலைஞர் அவர்களுடையது : இதிலே எந்த , எந்த கிரகம் என்ன நிலைலே இருக்குதுன்னு பாருங்க :





எப்படி பார்க்கணும் ?


முதல்லே எடுத்ததும் - நீங்க பார்க்க வேண்டியது , லக்கினம்......


இவருக்கு - என்ன லக்கினம் ? - கடகம் ... (குட்... நீங்களும் கண்டு பிடிச்சு இருப்பீங்க.. இல்லையா? )


இவருக்கு என்ன ராசி ? - சந்திரன் எங்கே இருக்கிறார் ? - ரிஷபத்திலே. So , இவருக்கு ரிஷப ராசி.



சரி, இப்போ மத்த கிரகங்களைப் பார்க்கலாம்...

சூரியன் - ரிஷபத்திலே . ரிஷபம் அவருக்கு - பகை வீடு.
சந்திரன் - ரிஷபம் , உச்ச வீடு. ( ஐந்து மடங்கு - பலம் ... )
செவ்வாய் - மகரம் - உச்ச வீடு ( ஐந்து மடங்கு - பலம் ... )
புதன் - மிதுனம் - ஆட்சி வீடு ( மூன்று மடங்கு - பலம். )
குரு - விருச்சிகம் - நட்பு வீடு.
சுக்கிரன் - மிதுனம் - நட்பு வீடு
சனி - துலாம் - உச்ச வீடு ( ஐந்து மடங்கு - பலம் ... )
ராகு / கேது - பகை வீடு.

மொத்தமா மூணு - உச்ச கிரகங்கள் , ஒரு - ஆட்சி கிரகம் , ரெண்டு கிரகம் - நட்பு ஸ்தானம், ....

மீதி - மூணு கிரகம் - சரி இல்லைன்னு வச்சுக்கலாம். (இப்போதைக்கு நமக்கு தெரிந்த விதிகள் படி.... )

யார் ஒருத்தருக்கு , நீசம் இல்லாம, ஒரு ஒரு கிரகம் ஆட்சியோ, உச்சமோ இருந்தாலே அவங்களுக்கு.. வாழ்க்கை நல்லா இருக்கும். .. மூணு கிரகம் னா அவரு , கிட்டத் தட்ட ராஜா தான்.. இவருக்கு எப்படி னு பாருங்க.. கொடுத்து வைச்ச மனுஷன்..
மத்த அம்சங்களைப் பத்தி , பின்னாலே விரிவா அலசுவோம்..

சாமி எல்லாம் இல்லை. ஜாதகம்லாம் பொய்யி னு அவர் சொன்னா.. போச்சா? அவருக்கே ரகசியமா எத்தனை ஜோதிடர்கள் இருக்கிறாங்களோ..?

இன்னொரு விஷயம் நல்ல நோட் பண்ணிக்கோங்க. .... ராகு எங்க இருந்தாலும், அதுக்கு நேரா , ஏழாம் வீட்டிலே - கேது இருப்பார். ... ஒன்னு தலை, இன்னொன்னு வால் மாதிரி னு நெனைச்சுக்கோங்க. .... இது எல்லோருக்கும். ... இது ஒரு விதி. அப்படி இல்லாம, மாத்தி இருந்தா... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..

சரி, இப்போதைக்கு இந்த ரெண்டு படங்களை தெளிவா , படிச்சு புரிஞ்சுக்கோங்க...
மீதி அடுத்த பாடத்திலே பார்க்கலாம்... OK வா?

யாருக்காவது இந்த பாடங்களிலே சந்தேகம் னா... பின்னூட்டத்திலேயே ( கமெண்ட்ஸ்) கேளுங்க... இதைத் தவிர சந்தேகம் னா... மெயில் லெ கேளுங்க...

Read more: http://www.livingextra.com/2011/02/02.html#ixzz1cHzPjnr2

தசா புத்தி கண்டுபிடிப்பது

இதிலே - முதல் வரிசையிலே - மூன்று நட்சத்திரங்கள் இருக்கு இல்லையா? - இந்த நட்சத்திரங்களுக்கு - அதிபதி - கேது. இதைபோலே எல்லா நட்சத்திரங்களுக்கும் யார் யார் நட்சத்திர நாயகர்கள் னு பார்ப்போம்.

கேது - அஸ்வினி, மகம், மூலம்
சுக்கிரன் - பரணி, பூரம், பூராடம்,
சூரியன் - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.
சந்திரன் - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,
செவ்வாய் - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்
ராகு - திருவாதிரை, சுவாதி , சதயம்
குரு - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி
சனி - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி
புதன் - ஆயில்யம் , கேட்டை, ரேவதி

இது எதுக்காக இந்த வரிசைனு கேளுங்க ..?

நீங்க எந்த நட்சத்திரத்திலே பிறந்தாலும் - அந்த நட்சத்திர அதிபரோட தசை தான் - உங்களுக்கு முதல்லெ வரும்... அதன்பிறகு, அடுத்த அதிபர், .. இப்படி வரிசையா வந்து , திரும்ப முதல் தசை கேது, அப்புறம் சுக்கிரன், .. இப்படியே போகும்..

நீங்க பிறந்த நட்சத்திரம் - சித்திரைனு வச்சுக்கோங்களேன் - நீங்க , பிறந்ததும் - முதல் ல வரும் தசை - செவ்வாய் தசை. அதன் பிறகு , ராகு தசை , அப்புறம் - குரு , சனி , புதன் தசை வரும். அதுக்கு அப்புறம் - மேலே போகணும் - கேது தசை , சுக்கிரன், சூரியன்... இப்படியே வரணும்.

ஒவ்வொரு தசையும் எத்தனை வருஷம்னு பார்ப்போம்.

கேது - 7 வருடங்கள்
சுக்கிரன் - 20 வருடங்கள்
சூரியன் - 6 வருடங்கள்
சந்திரன் - 10 வருடங்கள்
செவ்வாய் - 7 வருடங்கள்
ராகு - 18 வருடங்கள்
குரு - 16 வருடங்கள்
சனி - 19 வருடங்கள்
புதன் - 17 வருடங்கள்


ஒரு சுற்று முடிய - 120 வருஷங்கள் ஆகும். So , எல்லாருக்கும் , எல்லா திசையும் வருவது இல்லை. ... உதாரணத்துக்கு , ஒருத்தருக்கு ஜாதகத்திலே சுக்கிரன் - நல்ல நிலை லெ இருக்கும் னு வைச்சுக்குவோம். ஆனா , அவர் பிறந்தது கார்த்திகை நட்சத்திரம் னு வைச்சுக்கோங்களேன். அவரு, கிட்டத்தட்ட் - நூறு வருஷம் முடிச்ச பிறகு தான், சுக்கிர தசையை பார்க்க முடியும். நல்லா இருந்தும், பிரயோஜனம் இல்லை.

மனுஷன் செஞ்ச பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப , சரியாய் இந்த தசை நடக்கும். ..எப்படி எல்லாம் "செக்" வைக்கிறாங்க பாருங்க...

ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் , நான்கு பாதங்கள் இருக்கும். இல்லையா?
உதாரணத்திற்கு பிறந்த நட்சத்திரம் = = = திருவோணம் 3 ஆம் பாதம் னு வைச்சுக்கோங்களேன்.
அதனாலே, முதல்ல சந்திர தசை வரும் இல்லையா. மொத்த வருஷம் - 10 . கரெக்டா?
So , ஒவ்வொரு பாதத்திற்கும் - 2 1 /2 வருடங்கள் வரும். so , மீதி இருப்பது, ( 3 ஆம் பாதம், 4 ஆம் பாதம் மட்டுமே ) 5 வருஷங்கள் இருக்கும். இதிலே , கர்ப்ப செல் போக கழிவு இருப்பு பார்க்கணும். அதை எப்படி பார்க்கிறது னு, நாம மெதுவா பார்க்கலாம். இப்போவே சொன்னா, ரொம்ப கஷ்டமா பீல் பண்ணுவீங்க.. ஒரு உதாரணத்திற்கு - கர்ப்ப செல் இருப்பு. 6 மாதங்கள் னு எடுத்துக்கலாம்.

அதனாலே , அவர் ஜாதகத்திலே - சந்திர தசை இருப்பு - 4 வரு , 6 மாதங்கள், 0 நாட்கள் அப்படின்னு எழுதி இருப்பாங்க.

இப்போ இன்னொரு விஷயம் ஞாபகம் வைச்சுக்கோங்க. மொத்தம் - 10 வருடம் , சந்திரா தசை வருது இல்லையா. ஒவ்வொரு கிரகத்திற்கும் - புத்தி இருப்பு மாறுபடும்.
மொத்தம் 9 கிரகம் இருக்கு. இல்லையா..

சந்திர தசை , வந்ததுனா - முதல்லே - சந்திர புத்தி வரும் (10 மாதங்கள் ) . அப்புறம் செவ்வாய் புத்தி( 7 மாதங்கள் ) , அப்புறம் ராகு புத்தி (18 மாதங்கள்) . ... மொத்தமா எல்லாம் கூட்டினா 10 வருடங்கள் வரும்.

புத்தி இருப்பு எப்படி பார்க்கணும் னு ஒரு பார்முலா இருக்கு.
புக்தி
( B x C / A ) = வருடங்கள்

மொத்த தசை இருப்பு : (A ) - 120 வருடங்கள்
தசா கிரகத்தோட மொத்த வருடங்கள் : (B)
புத்தி பார்க்க வேண்டிய கிரகத்தோட இயல்பான தசை வருடங்கள் : (C )







சனி தசை லெ - கேது புத்தி எவ்வளவு னு பார்க்கலாம்.? ( சிறிய டெஸ்ட் ..)

சனி தசை மொத்தம் எவ்வளவு - 19 வருஷம். B = 19 ;
கேது வோட இயல்பான தசை = 7 வருஷம் ; C = 7


( 19 * 7 / 120 ) = 1 .108333 வருதா...? அதை அப்படியே , மாதம் நாளா மாத்திக்கோங்க.
நீங்க இதை 360 ஆலே பெருக்கிக்கோங்க. = 399 வருதா. 13 மாதம் , 9 நாள் வரும்.

(ஜோதிடப்படி, கணக்கு பண்ண ஈஸியா , 1 வரு = 360 நாட்கள் ; 1 மாதம் - 30 நாட்கள் னு எடுத்துக்கோங்க.. )

பிறக்கும் போது , எந்த தசை , எந்த புக்தி இருப்பு னு தெளிவா எழுதி இருப்பாங்க..
அந்த டீடைல் தெளிவா இருந்தாத் தான், உங்களுக்கு இப்போ நடப்பு தசை , புக்தி என்னனு தெளிவா கண்டு பிடிக்க இயலும். .... அது கண்டு பிடிச்சாத்தான் , உங்களுக்கு என்ன பலன்கள் இப்போ ஏற்படும் னு கண்டு பிடிக்க இயலும்.....

Read more: http://www.livingextra.com/2011/02/03.html#ixzz1cHxSGnXX

Wednesday 26 October 2011

கிரக காரகங்கள்

கிரக காரகங்கள்
சூரியன்: தந்தை, மகன், வலது கண், அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ், கீர்த்தி, மாநகரம், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர், சிவன், அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல், சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம், மண், அணுத் தொழில், அறுவை சிகிச்சை நிபுணர், துப்பறிதல், தந்தையின் தொழில்.

சந்திரன்: மனம், ஆழம், அறிவு, தாய், மாமியார், திரவப் பொருள், பயணம், உணவுப்பொருள், இடது கண், இடமாற்றம், கற்பனை, பால், நதி, கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல், துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன் மனைவி, சோதிடம், அரிசி வியாபாரம், பழ வியாபாரம், கவிதை, ஓவியம், நீர் தொடர்பான தொழில், பார்வதி.

செவ்வாய்: சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை, காவல்துறை, இராணுவம், வெட்டுக் காயம், வீரம், பூமி, ரத்தம், பல், முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம், அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை, செங்கல் சூளை, தாதுப் பொருட்கள், பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை.

புதன்: கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி, புலனாய்வுத் துறை, தரகு, மஹாவிஷ்ணு, தூதரகப்பணி.

குரு: ஜீவன், வேதம், பக்தி, ஞானம், ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர், நீதிபதி, உயர்குலம், ஆசிரியர் கௌரவம், சாந்த குணம், தெற்கு, சதை, தொடை, பூஜை அறை, பசு, அமைச்சர், நிர்வாகி, மூக்கு, கரும்பு, வாழை, சோதிடம், நீதித்துறை, தட்சணாமூர்த்தி.

சுக்கிரன்: மனைவி, சகோதரி, காமம், காதல், பாடகன், நடிகன், வீடு சுகம், வாசனைத் திரவியங்கள், ருப்பை, கன்னம், வட்டித் தொழில், மது பானம், ஆடை ஆபரணங்கள், மலர், வேசி, திருமணம், பிந்து, பணம், இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா, மஹாலட்சுமி, மூத்த சகோதரி, மூத்த மரு மகள்.

சனி: மூத்த சகோதரன், சேவகன், கழுதை, எருமை, தொழில்காரகன், தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண உறுப்பு, சேமிப்பு அறை, சாப்பாட்டு அறை, சாலை, வாயு சம்பந்தமான நோய், நிலக்கரி, சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல், தொழிற்சாலையில் எடுபிடி வேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும் வேலை, பழைய பொருள் விற்பனை, துப்புறவுத் தொழில், கால்நடை வளர்த்தல், லட்சுமி, பரமசிவன், கர்மா, அரசு தூதுவர்.

ராகு: வாய், உதடு, காது, முஸ்லீம், கோபுரம், அகலமான வீதி, தகப்பன் வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை, குடை, பாம்பின் தலை, கடத்தல் தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக், இரசாயனம், மொட்டை மாடி, சேமிப்புக் கிடங்கு, விதவை, தொழுநோய், மருத்துவம், வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம் செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத் தொழில், போகக்காரகன்.

கேது: சாயா கிரகம், மோட்ச காரகன், கயிறு, நூல், கூந்தல், மூலிகை, பாம்பின் வால், குறுகிய சந்து, மருத்துவம், சோதிடம், ஆன்மீகம், சட்டத்துறை, துறவறம், தாய்வழிப் பாட்டன், நரம்பு, குளியல் அறை, ஞானம், தவம், மனவெறுப்பு, கொலை செய்தல்.

இதில் கொடுத்திருக்கும் காரகங்கள் ஒரு சிலவே.

இன்னும் பல காரகங்கள் இருந்தாலும் கட்டுரையின் விரிவு கருதி கூறப்படவில்லை

Tuesday 25 October 2011

நோய்களும் கிரகங்களும் --விரிவு

கிரகங்களும் அவை தோற்றுவிக்கும் நோய்களும் அவற்றிற்கான பரிகாரங்களும்:
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.
சூரியன்: மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை.

சந்திரன்: மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் போன்றவை.
செவ்வாய்: மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள்.
புதன்: இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் போன்றவை.
குரு: தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு போன்றவை.
சுக்கிரன்: கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பு வியாதிகள் போன்றவை.
சனி: மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிப்பு போன்றவை.
ராகு: அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் போன்றவை

கேது: புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு போன்றவை.
நோய்களும் அவற்றை குணப்படுத்தும் நவரத்தின கற்களும்:மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரகதத் துடன், நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய ஜாதி சிகப்பு பவளத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.
கடக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவிற்குரிய கனக புஷப ராகத்தை நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள்; வரும்.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.
துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவுக்கு உரிய கனக புஷபராகத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய சிகப்பு பவளத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.
தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன்; இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.
மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரக தத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.
கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சந்திரனுக்குரிய ஜாதி முத்தினை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.
மீன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சூரியனுக்குரிய மாணிக்கத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

கிரகங்களும் அவற்ரை சாந்திசெய்யும் நவரத்தின கற்களும்:
சூரியன் - மாணிக்கம்
சந்திரன் - ஜாதி முத்து
செவ்வாய் - சிகப்பு பவளம்
புதன் - மரகதம்
குரு - கனக புஷபராகம்
சுக்கிரன் - வைரம்
சனி - நீலம்
ராகு - கோமேதகம்
கேது - வைடூரியம்
இரண்டு ரத்தினங்களை இணைக்கும்போது, அவைகளுக்குள் பேதை ஏற் படுமானால், நடுவில் ஏதேனும் சாதாரண கல்லினை வைக்க வேண்டும். மோதிரம் அடியில் திறப்புடன் ஓபன்- செட்டிங் முறையில் அமைக்கப்பட வேண்டும். நோயின் தாக்கம் தீர்ந்தவுடன், மோதிரத்தை எடுத்துவிட வேண் டும். மேலே குறிப்பிட்டவை பொதுவானது ஆகும். தனிப்பட்ட ஜாதகங் களில், கிரகங்களின் நிலையை ஆராய்ந்து, நவரத்தினங்களை உரிய முறையில் அணிந்து, நன்மைகளைப் பெறலாம்.
மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல்:
மூன்றாம் எண் குருவிற்கு உரியது.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 3ஆம் எண்ணாகும்.
இந்த மூன்றாம் எண்காரர்கள் பொதுவாக வசீகரமானவர்கள். ஆண்கள் கம்பீரமாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். சிலர் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுடன் இருப்பார்கள்
ஜோதிடமாகட்டும் அல்லது எண் ஜோதிடமாகட்டும், குருவிற்கு முக்கியமான பங்கு உள்ளது. சூரியனிட மிருந்து தான் பெறும் சக்தியைவிடப் பன்மடங்கு சக்தியை வெளிபடுத்தும் கிரகமாகும் அது. நியாயத்தையும், தர்மத்தையும் போதிக்கும் கிரகம் அது. அதனால்தான் அதற்குப் பிரஹஸ்பதி அல்லது வாத்தியார் என்ற பெயரும் உண்டு. பண்டைய நூல்கள் குருவை முக்கியப்படுத்திப் பல செய்திகளைச் சொல்கின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் குருவிற்கு நட்புக் கிரகங்களாகும். தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் குருவிற்குச் சொந்த இடங்களாகும். கடகம் உச்சமான இடம். மகரம் நீசமான இடம்.
பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டிற்குக் காரகன் குரு. தந்தைக்குக் காரகன் சூரியன் என்றபோதிலும். ஒன்பதாம்வீட்டின் மற்ற செயல்பாடுகளுக்கெல்லாம் குருவே அதிபதி.
ஒன்பதாம் வீடுதான் அதிர்ஷ்டத்தைக்குறிக்கும் வீடு. அதிர்ஷ்டத்திற்கு அதிபதி குரு. அதை மறக்க வேண்டாம். ஜாதகத்தில் குரு, கேந்திர கோணங்களில் இருப்பது நன்மை பயக்கும்!
நுண்ணறிவு, திருமணம், வாரிசு, ஆகியவற்றிற்கும் குருவின் அமைப்பு முக்கியம். பெண்ணின் ஜாதகத்தில் குருவின் அமைப்பைவைத்துத்தான் அவளுக்கு நல்ல கணவன் அமைவான். ஜாதகத்தில் குரு மறைவிடங்களில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.
சனி, ராகு அல்லது கேதுவுடன் கூட்டாகவோ அல்லது எதிரெதிர் பார்வையுடனோ இருக்கும் குருவால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. மிதுனம், கன்னி லக்கினக்காரர்களுக்கு, அதுபோன்ற அமைப்பு இருந்தால், சிலரது திருமணம் விவாகரத்தில் முடிந்துவிடும்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் கடினமான உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள். தங்களைத் தாங்களே பலவிதமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்கள். சோம்பேறித்தனம் என்பது சிறிதும் இருக்காது. அதீதமாகப் பொருள் ஈட்டக்கூடியவர்கள். அதாவது சம்பாதிக்கக்கூடியவர்கள்.
அறவழிகளில் ஈடுபாடு உடையவர்கள். கடமையே வெற்றிக்கு வழி என்பதிலும் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். செயல்படக்கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். ஓய்வு என்று சொல்லி ஒரு இடத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். செய்யும் வேலை அலுப்பைத் தந்தாலும், அதை விடாது செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள்.
எந்த வேலையை மேற்கொண்டாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவர்கள். அந்த விதமான செயல்பாடே அவர்களுக்கு அதீதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவர்களின் தாரக மந்திரம். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக் கூடியவர்கள். அதனால் பலரது நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை விரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சிறப்புடன் வாழ்பவர்கள். முத்தவர்களின் அன்பு, பாசம், பரிவு, ஆலோசனை என்று அனைத்தும் இவர்களைத் தேடி வரும். சமூக அந்தஸ்தும் தேடிவரும்.
ஆரோக்கியமான உடற்கட்டு இருக்கும். வாழ்க்கையுடன் இயைந்து போவார்கள். ஆக்கபூர்வமானவர்கள். மகிழ்ச்சியை உடையவர்கள். நகைச்சுவை உணர்வுடையவர்கள். மற்றவர்களுக்குத் தூண்டுதலாக விளங்கக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள்.
ஒற்றிலக்க எண்களில் - அதாவது 1,3,5,7,9 எனும் எண்களில் 3ஆம் எண்தான் அதிக சக்தியுள்ள எண். தலைமை எண் என்றும் சொல்லலாம்.
கடுமையான உழைப்பினால், சிலருக்கு, மன அழுத்தங்கள் உண்டாகும். சில இடையூறுகள் ஏற்படும். ஆனால் இந்த எண்ணிற்கு இயற்கையாகவே உள்ள அதிர்ஷ்டம்தரும் அமைப்பினால், அவைகள் எல்லாம் அவ்வப்போது களையப்பட்டுவிடும். தேவையானபோது இந்த எண்காரர்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். செய்யும் வேலையில் அல்லது தொழிலில் தலைமை ஏற்கும் நிலைக்கு உயர்வார்கள்.
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்: 3,12, 21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும். வியாழக்கிழமை உரிய கிழமையாகும். அதுபோல திங்கள், செவ்வாய் & புதன் கிழமைகளும் இந்த எண்காரர்களுக்குச் சாதகமான கிழமைகளே!
இந்த எண்காரர்களுக்குச் சாதகமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறத்தில் துண்டு, படுக்கைவிரிப்பு, தலயணை உறை, கைக்குட்டை என்று எல்லாவற்றிலும் மஞ்சள் நிறத்தையே போற்றி வைத்துக்கொள்ளலாம்
நவரத்தினங்களில் மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் நன்மை பயக்கும்!
உடல் நலம்: இந்த எண்காரர்களுக்கு, நீரழிவு நோய், மஞ்சள்க் காமாலை நோய் போன்றவைகள் வரக்கூடும். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த எண்காரர்களின் வாழ்க்கையில், 21, 30, 33, 36, 48, 57, 66, ஆகிய வயதில் வாழ்க்கை ஏற்ற முடையதாக இருக்கும்

Sunday 23 October 2011

ப்ளாக் பற்றிய ரகசியங்கள்

இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? (பாகம் - 04 )
|
19
Share பணம் சம்பாதிக்கணுமா? முதல்லே உங்களுக்கு தேவை - பணம் சம்பாதிக்கணும்னு ஒரு ஆசை , வெறி இருக்கணும். ஒரு வேட்டை நாயோட - வேகம், விறைப்பு எப்பவும் இருக்கணும். சோம்பேறித்தனம் துளிகூட ஆகாது பாஸ்.. ! நல்ல சம்பாதிங்க.. உங்க தன் நம்பிக்கையை அது முதல்லே வளர்க்கும்....

நமது முதல் மூன்று கட்டுரைகளைப் படித்துவிட்டு , மிகுந்த ஆவலுடன் உள்ள வாசக அன்பர்களுக்கு வணக்கம். இந்த கட்டுரைலே நீங்க கொஞ்சம் தெரிஞ்சுக்க வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்..

நான், உங்களுக்கு ஏற்கனவே சொன்ன மாதிரி - இணையம் மூலம் நாம் சம்பாதிக்கிற வழிகள் பல இருந்தாலும், மிக முக்கியமான , நம்பகமான ADSENSE பற்றி , இன்னும் விரிவா தெரிஞ்சுக்கிட்டு மத்த விஷயங்களைப் பார்ப்போம்..

நாங்களும் கலக்குறோம் பேர்வழினு --- தமிழ் ப்ளாக் ஆரம்பிச்சுடாதீங்க.. ! பைசா பிரயோஜனம் இல்லை. ! ஒரு ரெண்டு , மூன்று வருஷம் விடாம தமிழ் ப்ளாக் develop பண்ணினா , பின்னாலே - ஒருவேளை உங்களுக்கு உபயோகப்படலாம். நீங்க சம்பாதிக்கணும்னு நினைச்சா , சிம்பிள் - சினிமா சம்பந்தப்பட்ட - நியூஸ் , படங்கள் - இப்படி ஏதாவது ஒன்னு எடுத்துக்கோங்க. இங்கிலீஷ் லேயே ஆரம்பியுங்க.. எதுக்காக சொல்றேன்னா.. ஆரம்ப காலத்துலே , உங்கள் ப்ளாக் குக்கு எத்தனை visitors வர்றாங்களோ , அத்தனைக் கத்தனை - உங்களுக்கு ஆர்வம் வரும்... சினிமா சம்பந்தமா நீங்க எதைப் போட்டாலும் , அதுக்கு ஒரு நூறு பேராவது தினமும் வருவாங்க... ! கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகும். முடிஞ்ச அளவுக்கு சொந்தமா நீங்களே எழுதுங்க. புதுசா எதை எழுதினாலும், கூகுளுக்கு கொண்டாட்டம். உடனே இன்டெக்ஸ் ஆகும். நல்லா உங்களுக்கு பழக்கம் ஆனதுக்கு அப்புறம் , உங்களோட favourite subject லே புகுந்து விளையாடலாம்.

உங்க ப்ளாக் க்கு எத்தனை visitors லைவ் லே இருக்கிறாங்கன்னு பார்க்கிறதுக்கு "FEEDJIT " னு ஒரு widget இருக்கு. உங்களுக்கு ஒரு ஆர்வத்துக்கு மட்டும் தான். இதனாலே வேற ஒன்னும் use இல்லை. உங்க ப்ளாக் லே இதை இன்செர்ட் பண்ணிக்கோங்க. நிறைய ஆளுங்க வரும்போது உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு இருக்கும்.


நான் ஏற்கனவே சொல்லி இருக்கிற மாதிரி , இந்த தொடர் கட்டுரையோட நோக்கம் ப்ளாக் எப்படி develop பண்றது மட்டும் இல்லை , அது மூலமா எப்படி சம்பாதிக்கிறதுன்னு பார்க்கிறது தான்..


உங்களுக்கு ப்ளாக் லே இருக்கிற சின்ன சின்ன சந்தேகங்களுக்கு , தமிழ் லே ஒரு நல்ல சைட் இருக்கு. பிளாக்கர் நண்பன் .... இதைப் பாருங்க.. உங்க பல கேள்விகளுக்கு , இதில்லே நல்ல தெளிவான விளக்கம் கிடைக்கும்.


சரி, Google Adsense - நீங்க ப்ளாக் ஆரம்பிச்ச உடனே கிடைக்காது.. உங்க ப்ளாக் ஒரு நல்ல ப்ளாக் னு சர்ச் எஞ்சின் recognise பண்ணனும் . அதுக்கு அப்புறம் தான் கிடைக்கும். ஆறு மாசமாவது ஆகணுமே.. வேறு வழி இருக்கா?
இருக்கு... நிறைய இணைய தளங்கள் இருக்கு.. அதன் மூலமா apply பண்ணினா வாங்கலாம்.


www .Indyarocks .com னு ஒரு இணைய தளம் இருக்குது. இதிலே நீங்க உள்ள register பண்ணுங்க. உங்க கிட்டே இருக்கிற படங்கள் , இல்லை நெட் லே இருந்து டவுன்லோட் பண்ணின படங்கள் - ஒரு இருபது , இருபத்தஞ்சு - இந்த தளத்துலே upload பண்ணுங்க. அதுலேயே உங்களுக்கு apply adsense option இருக்கும். apply பண்ணுங்க. Adsense apply பண்ணும்போது , உங்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் , வீட்டு முகவரி எல்லாம் ஒரிஜினல் கொடுங்க. ஏதாவது பழக்க தோஷத்திலே - வேற பெயர் கொடுத்திடப் போறீங்க. உங்கள் அக்கௌன்ட் லே நூறு டாலர் கிராஸ் ஆனா உடனே, உங்கள் பெயரிலே - கூகுள் லே இருந்து செக் வரும். நீங்க கொடுத்த வீட்டு முகவரி க்கு வரும். முடிந்த அளவுக்கு courier சர்வீஸ் இருக்கிற ஊர் முகவரி யா இருந்தா நல்லது. சமீபத்துலே வர்ற செக் எல்லாம் , நம்ம ஊர்லே அதிகமாக "BLUE DART " கூரியர் லே வருது. அந்த சர்வீஸ் உங்க ஊருக்கு இருக்க பாருங்க. ஏன்னா , அட்ரெஸ் அப்புறமா மாற்ற முடியாது. .... Adsense detail வேறு யார் கிட்டேயும் ஷேர் பண்ண வேண்டாம். HIGHLY CONFIDENTIAL ஆ வைச்சுக்கோங்க. .

ஒரு நாளைக்கு ஒன்னு , அல்லது வாரத்துக்கு ஒன்னு பதிவு கண்டிப்பா போடுங்க. உங்களால் முடிந்த அளவுக்கு பதிவு போட்டுக்கிட்டே இருங்க...

அப்புறம், ஒரு முக்கிய விஷயம்.. நீங்க என்னதான் பதிவு போட்டாலும், உங்க பதிவுக்கு visitors வர வைக்கணும் இல்லையா? பத்து நிமிஷம் போஸ்டிங் போட spend பண்ணினா, ஒரு மணி நேரமாவது அதைப் பிரபலப் படுத்த முயற்சி பண்ணுங்க.. அதுக்கு நிறைய தளங்கள் இருக்கு. social sites னு சொல்லுவாங்க.
ZIMBIO , digg , hotklix , னு நிறைய தளங்கள் இருக்கு. இதிலே பார்வையிடும் வாசகர்கள் லட்சக்கணக்கிலே தினமும் வர்றாங்க. உங்க பதிவுகள் நீங்க இங்கே ஷேர் பண்ணும்போது, அதைப் பார்த்திட்டு - உங்க வலைப்பூவுக்கு வருவாங்க. தமிழ்லே - இன்ட்லி , தமிழ்மணம் , மாதிரி நிறைய தளங்கள் இருக்கு. மேலும், facebook , twitter - னு உங்க பதிவுகளை , நீங்க ஷேர் பண்ணும்போது , உங்களோட வாசகர் எண்ணிக்கை அதிகமாகும்.

உங்கள் ultimate aim - வாசகர் எண்ணிக்கை அதிமாக்கணும். alexa ரேங்க் டாப் லே வரணும் , நல்ல தரமான ஒரிஜினல் பதிவுகள் மூலம் பேஜ் ரேங்க் வரணும்.. இவ்வளவு தான். அதுக்கு என்ன என்ன பண்ணணுமோ , எல்லாம் பண்ணுங்க.

ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரமாவது , புதுசு புதுசா விஷயங்கள் கத்துக்கோங்க. ஆறா இருந்தாக் கூட , தண்ணி தேங்க ஆரம்பிச்சுட்டா - அதுக்கு பேரு குட்டை தான். தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு.. நான் ஒரு சின்ன கோடு போட்டு இருக்கேன்.. அவ்வளவுதான்.. இதுக்கு மேல உங்களுக்கு தேவையான விஷயங்கள் இணையத்துலேயே எவ்வளவோ கிடைக்கும்.. தேடுங்க.. கண்டுபிடிச்சு கத்துக்கோங்க.. எந்த சந்தேகம்னாலும் கூச்சப்படாம என்கிட்டே கேட்கலாம்... !

சரி, பணம் சம்பாதிக்கலாம் வாங்கன்னு , நம்ம தொடர் கட்டுரைகளை படித்து விட்டு எத்தனை பேர், புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு இருக்கிறீங்க. ? சில பேர் ப்ளாக் சம்பந்தமா கொஞ்சம் சந்தேகம் னு கேட்டு இருந்தீங்க.. திரும்பவும் சொல்றேன் .. உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும், தயவு செய்து E-மெயில் , மூலம் கேளுங்க. ஒரே நாளில் உங்களுக்கு reply கிடைக்கும்.. கோச்சுக்காதீங்க.. தினமும் அவ்வளவு மெயில் வருது,,, போன் நம்பர் ஷேர் பண்ணினா,,, அன்புத்தொல்லை அதிகமாகிடும்னு ஒரு பயம் தான்...

இப்போ தான் புதுசா ப்ளாக் ஆரம்பிச்சவங்களுக்கு - First preference ...Immediate reply . உங்க followers லிஸ்ட் லே முதல் ஆளா நானும் join பண்ணத்தான். உங்க ப்ளாக் நேம் தெரியப்படுத்துங்க.



Read more: http://www.livingextra.com/2011_07_01_archive.html#ixzz1bcp6x7K9











http://www.livingextra.com/2011_07_01_archive.html#ixzz1bcoXcLF5

கிரகங்களும் நோய்களும்

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

சூரியன்: மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை.

சந்திரன்: மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் போன்றவை.

செவ்வாய்: மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள்.

புதன்: இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் போன்றவை.

குரு: தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு போன்றவை.

சுக்கிரன்: கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பு வியாதிகள் போன்றவை.

சனி: மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிப்பு போன்றவை.

ராகு: அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் போன்றவை

கேது: புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு போன்றவை.


Read more: http://www.livingextra.com/search/label/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%20%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#ixzz1bchn4kib